Wednesday 6 January 2010

3-idiots




இன்றைய கல்வி முறையில் காணப்படும் குறைபாடுகளை தேன் தடவிக்கொடுத்திருக்கிறார்கள்.

காணாமல் போன தனது நண்பனை கண்டுபிடிக்க, விமானத்தை அவசரக்கால தரையிறக்கம் செய்து மாதவனும்,ஷர்மன் ஜோஷியும் ஒரு போன் காலை நம்பி வருகின்றனர்.நண்பன் நண்பனைத்தேடி வந்த அவர்களுக்கு சைலன்சர்(ஓமி)ஏமாற்றத்தைக்கொடுத்து, தான்தான் அவர்களை வரவழைத்ததாக கூறுகிறான்.தான் போட்ட சபதத்தை நினைவூட்டுகிறான்.

'நான் என்னவாக ஆசைப்படுகிறேன் என்று என்னிடம் யாரும் கேட்கவில்லை' என்று மாதவன் புலம்பும்போதுதான் உண்மையில் படம் ஆரம்பிக்கிறது.wild life போட்டோகிராபராக ஆக விரும்பும் மாதவனும், குடும்பத்தை சுமக்க தயார் படுத்தப்படும் ஜோஷியும் பெற்றோர் விருப்பத்திற்காகவே ,விருப்பமில்லாமல் படிக்கிறார்கள்.வந்த அன்றே சீனியர் மாணவர்களுக்கு ஷாக் கொடுக்கும் மாணவனாக அறிமுகமாகிறார் அமீர்கான்.அன்றிலிருந்து ஆரம்பிக்கிறது அவரது சேட்டைகள்.

வீரு சகஸ்ரபுத்தே,சுருக்கமாக 'வைரஸ்'.. இது பொ(b)மன் இரானி.புது மாணவர்களுக்கு, அறிமுக உரைகொடுக்கும்போது, தனது கல்லூரியின் அருமை, பெருமைகள் மற்றும் தனது விரிவுரையாளர் தனக்கு கொடுத்த, விண்வெளியில் புவிஈர்ப்புவிசை இல்லாத இடத்தில் கூட எழுதும் பேனாவை தன்னைப்போல் ஒரு புத்திசாலி மாணவனிடம் கொடுக்க வருடக்கணக்கில் காத்திருப்பதாக கூறுகிறார். அப்போது 'பென்சிலை ஏன் உபயோகிக்கக்கூடாது'என்று கேட்கும் அமீர்கானுக்கு க்ளைமாக்ஸில் பதில் கூறுகிறார்.

கஷ்டப்பட்டு மனப்பாடம் பண்ணும் முறையை அமீர்கான் கிண்டல் செய்யும்போதெல்லாம் தியேட்டர் அதிர்கிறது. 'புத்தகத்தில் இருப்பதை வரிக்குவரி எழுதினால்தான் மதிப்பெண், சொந்தமாக எழுதினால் ஒத்துக்கொள்ள முடியாது' என்று விரிவுரையாளர் சொல்லும்போது நிறைய சோகக்குரல்கள்.புரிந்து படிக்காமல், மனப்பாடம் செய்யும் முறை தவறு என்று உணர்த்துவதற்காக சதுர்(ஓமி) தயார் செய்து வைத்திருக்கும், வரவேற்புரையில் சில வார்த்தைகளை அமீர்கான் மாற்றி விட, அவமானப்படும் சதுர் 'இன்னும் பத்து வருடம் கழித்து இதே இடத்துக்கு வருவோம்.வாழ்க்கையில் யார் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்று பார்ப்போம்' என்று சவால் விடுகிறான்.அதே நேரத்தில் மாதவனுக்கும்,ஜோஷிக்கும் வேலை கிடைப்பது கஷ்டம் என்று பொமன் இரானியும், அமீர்கானிடம் சவால் விடுகிறார். இவர்கள் சவால் என்னவானது, என்பதுதான் மீதிக்கதை.

அமீர்கானின் கலாட்டாக்கள் ரசிக்கவைக்கின்றன.அவருக்கு இணையாக இருக்கிறது சதுரின் பாத்திரப்படைப்பு.படம் முழுக்க வந்தாலும்கூட, 'என்னுடன்சேர்ந்தால்உன்னைக்காப்பாற்றுகிறேன், ஆனால் உன்நண்பனை கல்லூரியிலிருந்து நீக்குவதாக,உன் கைப்பட கடிதம் தயார் செய்ய வேண்டும் 'என்று வைரஸ் கூறும்போது, நண்பனுக்காக, உயிரையே கொடுக்கத்துணியும் ஜோஷி , நெகிழ வைக்கிறார். .வைரஸுக்கும் அமீர்கான்&கோவிற்கும் இடையே நடக்கும் போட்டிகள் கலகலப்பு.கடைசியில் அமீர்கானைப்புரிந்துகொண்டு, தனது பேனாவைத்தரும் இடம் உணர்ச்சிகரம்.

மோனா சிங்(கரீனாவின் அக்கா) கிற்கு பிரசவம் பார்க்கும் காட்சியில் மும்பை மழை முக்கிய பங்கு வகிக்கிறது.கரண்ட் கட்டான நிலையில் அமீர்கானின் புத்திசாலித்தனத்தால் தாயும் சேயும் நலம்.

க்ளைமாக்ஸில் வைரஸ் சொல்லும் பதில்:விண்வெளியில் புவிஈர்ப்பு விசை இல்லாத இடத்தில் பென்சில் முனை உடைந்தால் அது சுற்றிக்கொண்டே வரும். அது எந்த வகையிலாவது கஷ்டம் கொடுக்கலாம்'.
கடைசியில் அமீர்கான் உண்மையில் யார் என்பது வெளிப்படும் இடம் சுவாரஸ்யம்.டைரக்க்ஷன் அருமை.'All is well' பாடல் தாளம் போட வைக்கிறது.




இது ஒரு மீள் பதிவு.

4 comments:

ராமலக்ஷ்மி said...

இந்தப் படம் பார்க்க எண்ணியுள்ளேன். பகிர்வுக்கு நன்றி.

imcoolbhashu said...

வாங்க ராமலெஷ்மி,
கண்டிப்பா பாருங்க.

pudugaithendral said...

நானும் பாத்து பதிவு போட்டுட்டேன்.
நல்ல படம்

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தென்றல்,

கதையும் எடுக்கப்பட்ட விதமும் நல்லா இருக்கும் இல்லியா. இப்போகூட பாட்ஷாலான்னு ஒரு படம் வந்திச்சு. மாணவர்களின் பிரச்சினைகளை சொல்லும் படம்தான் அது. ஷாகித் நடிச்சது.

LinkWithin

Related Posts with Thumbnails